Saturday 19 July 2014

அன்பு கணவன்




கடவுள் உருவில வந்த கணவன்  நீ !


உன்னுடன் நான் பேசிய மணித்துளிகள்


என் வாழ்வில் நான் சேகரித்த பொக்கிஷங்கள்!


தலை சாய்த்து எனனப் பாரத்து  நீ


சிரிக்கும் காந்தச் சிரிப்பு


அதில்  தொலைந்து  போனது


என் இதய  துடிப்பு....!


அன்பு என்னும் இதயக் கோப்பையில்


உயிரை  உருக்கி  ஊற்றிய பின்னும்


ஏதோ ஒன்று  மிச்சமாய்.


அது என்ன தெரியவில்லை?


புரியவில்லை?


இந்த தேடலும்  முடிவதில்லை.


உன்னிடம் நான் எதிர்பார்ப்பது


 
உன்னைத்  தவிர  வேறு ஒன்றுமில்லை


 


2 comments:

koilpillai said...

திருமதி அனிதா,

கண் கண்ட தெய்வம் கணவனுக்கு கற்கண்டு அபிஷேகம் பிரமாதம்.

(மனதை)கொடுத்துவைத்த கணவனுக்கு நீங்கள் கொடுத்து வைத்த காதல் பொக்கிஷம் கவிதையில் மிளிர்ந்தது.

வாழ்த்துக்கள்.

கோ

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! என்ன ஒரு அற்புதமான கவிதை!! இனிக்கின்றது!