Tuesday 7 October 2014

மழைக் காதல்

சிகப்பு வண்ணம் பூசிக்கொண்டு,
கங்கணம் கட்டிய வானம்
வெள்ளை மழையை பொழிந்த
கொள்ளை அழகு வானம்.

ஒவ்வொரு சொட்டிலும் சிந்திய உயிர்த்துளி
பூமியை நனைத்து அணைத்த அமுதத்துளி.
ஓட்டு தாழ்வாரத்தில் சொட்டு சொட்டாக
விழுந்த மழையில் மெட்டு போட்டு
ரசித்தது இதயம்.

வானமே குடையாக, குடைக்குள் நாம் மழையாக
குட்டிக் குட்டியாய் முளைத்த காளான்களில்
வந்த புது வாசத்தில் மனம் மயங்கும் போது,
இரண்டு மழைத்துளிகளுக்கு நடுவே உற்று நோக்கும்
போது தெறியும் மூன்றாவது மழைத்துளியை
கிழித்துக் கொண்டு செல்லும் மின்னல் கீற்று.

போருக்கு புறப்பட தயாராகும் போது
முழங்கும் ஓசையாய் இடி இடிக்கும் போது,
வரப்போகும் வெள்ளை மழைக்கு
சிறகடிக்கிறது மனம் ஆவலாய்.

மழை நின்றாலும்
மழைக் காதல் நிற்பதில்லை.





No comments: