Friday 20 November 2015

குழந்தை


 



உன் சொட்டு நீல சொற்களில்
தொலைந்து விட்டது கண்ணே எங்கள் துக்கம்.

எங்கள் கத்தரிப்பூ வண்ணக் கனவுகளை
நிறைக்கிறது  உன் மழலை சிரிப்பு .

ஒற்றை ரோஜாவொன்று புத்தகம் சுமக்கிறது
நீ பள்ளிக்கு செல்கையில் .

மஞ்சள் குளத்தில் துள்ளும் தங்க மீனாக
நீ கண் சிமிட்டும் போது உள்ளம் குளிர்கிறது .

நீ வந்ததால் வீடு ஆனது அற்புத
வானவில் கூடாரமாய் .

நீ இருப்பதால் எங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது
வெற்றுத்தாளில் வரைந்திட்ட வண்ணக் கோலமாய் .

​​
                                                                                     --- அனிதா சிவா .