Wednesday 25 November 2015

விருப்பங்கள் 10

வணக்கம் வலையுலக நட்புகளே ,
                                               சகோ கில்லர்ஜீயின் தொடர் பதிவுச் சங்கிலியில் ,நமது இனிய பதிவர் மாலதி அவர்கள் அழைத்ததின் பேரில், நான் என் 10 விருப்பங்களை சொல்லப் போகின்ற காரணத்தினால், வேற வழியே இல்ல நீங்க இத கேட்டுத்தான் ஆகணும்.




1. இந்தியாவின் அனைத்து  சாலைகளிலும் ,  இரு  புறமும் அடர்ந்த பசுமையான மரங்கள் வேண்டும்.

2., போர் பட்டினி இல்லாத உலகம் வேண்டும்.

3.எல்லா வியாதிகளுக்கும் கலப்படமில்லாத, மருந்துகளும் மருத்துவமும்    வேண்டும்.

4. வன்முறையும் ,வறுமையும் இல்லாத  பூமி வேண்டும்.

5.நம் மாணவர்களின் கற்றல் முறை மாற வேண்டும் .மனப்பாடம்  செய்து மதிப்பெண் வாங்காமல் ,அறிவை வளர்க்கும் கல்வி வேண்டும்.

6.நேதாஜியும் அப்துல் கலாமும் மீண்டும் பிறக்க வேண்டும்.

7.தான் வாழ பிறரைக் கெடுக்கும்  தீயவர்கள்  அழிய வேண்டும் .

8.லஞ்சம் இல்லாத  சமுதாயம் வேண்டும்.

9.சூரியனுக்கு சென்று  வரவும்,மேலும் சூரியனுக்கு அப்பால் உள்ளதை அறியவும் தேவையான விஞ்ஞானம் வேண்டும் .

10. அடுத்தது ரொம்ப முக்கியம்ங்க ,
    "அடுப்படி இல்லாத வீடு " வேண்டும் .அப்புறம் எப்படி சாப்புடறதுன்னு கேப்பீங்க . அதுக்காகவே "ஜிப் வச்ச வயிறு " வேண்டும்.
( அப்படியே ஜிப்ப திறந்து உணவுகளை கொட்டிட்டு ஜிப்ப மறுபடியும் மூடிட்டு போய்ட்டே இருக்கலாம்ல)

அவ்வுளவுதாங்க ......!

அடுத்து தொடர விரும்பும்  பதிவுலக நன்பர்கள் ,

1 சித்ரா சுந்தர்  http://chitrasundars.blogspot.com/
2. உமையாள் காயத்ரி http://umayalgayathri.blogspot.com/
3.தானைத்தலைவி http://thanaithalaivi.blogspot.com/
4.சித்ரா http://konjamvettipechu.blogspot.com/
5.துளசிதரன் தில்லையகத்து http://thillaiakathuchronicles.blogspot.com/
6.கோயில்பிள்ளை http://koilpillaiyin.blogspot.com/
7.யாதவன் நம்பி http://kuzhalinnisai.blogspot.com/
8.உஷா ஸ்ரீகுமார் http://usha-srikumar.blogspot.com/
9.ஆனந்தி  http://anbudanananthi.blogspot.com/
10.பிரியசகி http://piriyasaki.blogspot.com/


நன்றி ...!                                            --- அனிதா சிவா

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

10 : ஹா.... ஹா...

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ் 9, 10 செம ....

அதுக்கு முந்தியவை நடந்தால் ம்ம்ம்ம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....

அருமைதான்...தங்கள் நினைவுகள் கனவுகள் எண்ணங்கள் ஈடேறட்டும்....

Thulasidharan V Thillaiakathu said...

எங்களையும் அழைத்தமைக்கும் நன்றி. நாங்கள் எழுதிவிட்டொம்...கில்லர்ஜி தொடங்கிவைத்து எங்களையும் அழைத்துவிட்டாரே...ஹஹஹ்

Thulasidharan V Thillaiakathu said...

முடிந்தால் எங்கள் தொடர் பதிவைப் பார்க்கவும். கடவுளை நாங்கள் காணவில்லை பிரதமரைக் கண்டோம்.

சீராளன் said...

வணக்கம் !

ஆசைகள் எல்லாம் அழகாய்த்தான் இருக்கின்றன அதிலும்
நேதாஜியும் அப்துல் கலாமும் எனக்குப் பிடித்தவர்கள் அவர்களின் மீள்பிறப்பினை எதிர்பார்த்தலை வரவேற்கிறேன் !
அருமை தொடர வாழ்த்துக்கள்

anitha shiva said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.நேதாஜியும் அப்துல் கலாமும் புதிய பாதை வகுத்தவர்களாயிற்றே .காலம் கடந்தும் வாழும் சகாப்தங்கள்.

KILLERGEE Devakottai said...

வணக்கம் சகோ ஆசைகள் சுருக்கமாயினும் சிறப்பாக இருக்கிறது அதிலும் 10 வது மிகவும் ஸூப்பர் வாழ்த்துகள்
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

anitha shiva said...

வாங்க ஜி, வணக்கம்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ .

இந்த 10 வது ஆசை என் சிறு வயது முதலே இருக்கும் ஆசை.

இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.

balaamagi said...

அருமையான ஆசைகள்,
நடக்கனும்.