வார்த்தைகளை கொட்டிவிட்டு சென்று விடுகிறாய்
சற்றும் யோசிக்காமல்.
எதைக் கொண்டு அள்ளி எதில் கொண்டே போடுவது?
ஒன்றும் புரியவில்லை .....
வார்த்தைகள் அனைத்தும் விஷத்தில் குளித்து
நெருப்பைக் கையில் .ஏந்தியவை .
வார்த்தை தைத்த இடம்
புண்ணாகிப் போக,
வடுக்களின் தடம் இதயம் எங்கும் நிறைகிறது.
எப்போதிருந்து நானே உனக்கு பிரச்சினையாகிப் போனேன் ?
நீ இல்லாத நாளும் ,
நீ இல்லாத நானும் ,
வெறுமை தானே .
கோபம் , ஆத்திரம், எரிச்சல் ,இன்பம் , துன்பம்,
வறுமை, செல்வம், சோகம்,இழப்பு போன்றவைகள்
வரலாம், .போகலாம்.
ஆனால்ஊசிமுனையளவு வாழ்வில்
நாம் வாழாமல் தவற விட்ட நாட்கள்
திரும்ப வரவே வராது.
---- அனிதா சிவா
2 comments:
சரி தான்...
வணக்கம் வலை சித்தரே ,தங்கள் வருகைக்கு நன்றி .
Post a Comment